மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகா!

ஜெ.தியேடர்,
கர்நாடகா மாநிலம் மைசூரிலுள்ள அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகாசனம் செய்தார். சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 'மனித நேயத்திற்காக யோகா' என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் 15 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் சர்பானந்த்த சோனோவால் ஆகியோர் பங்கேற்றனர்.
யோகா நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிரதமர் பேசுகையில், நல்ல உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் யோகா வழிகாட்டுகிறது. நாள்தோறும் யோகா செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
உலக நாடுகளையும், மக்களையும் யோகா ஒன்றிணைக்கிறது. கோவிட் காலத்தில் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிகாட்டியது. உலகின் அனைத்து பகுதிகளையும் யோகா சென்றடைந்துள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருள் மனித நேயத்திற்கான யோகா. இந்த நாளில், ஐ.நா., மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.