தெரியாது தெரியாது தெரியாது:- ஆறுமுகசாமி ஆணையத்தில் இது தான் ஓ.பி.எஸ்.ஸின் பதில்!

ம.பா.கெஜராஜ்,
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்துக்கு இதுவரை விடை தெரியாமலேயே இருக்கிறது. மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 154 பேரிடமும் விசாரணை நிறைவு செய்துள்ளது.
இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் கூறிய நிலையில்
ஆணையத்தின் முன் முதல் தடவையாக ஆஜரானார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னிர் செல்வம், இந்நிலையில் ஆணையத்தில் எழுப்பப்பட்ட பல விணாக்களுக்கு தெரியாது என்றே அவர் பதிலளித்துள்ளார்.
அவரது தெரியாது என்கிற பதிலை கேட்ட ஆறுமுகசாமி ஆணையம், விடாமல் கேள்விகளை வீசி சில பதில்களையும் பெற்றுள்ளது.
ஆணையத்திடம் அவர் சொன்னது குறித்த விவரம்,
நான் எனது சொந்த ஊரில் இருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலமே ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு அழைத்தச் செல்லப்பட்டதை தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்றபோது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார்? என அவரிடம் ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது எந்தெந்த மருந்துகள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது.
ஜெயலலிதா மருத்துவமனை அனுமதிக்கப் படுவதற்கு முந்தைய தினமும் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜெயலிதாவை பார்த்தேன் எனவும், அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவில்லை எனவும் பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
இது தான் அவுங்க அம்மாவுக்கு காட்டும் விசுவாசம்.