திராவிடம்னு சொன்னாலே எடப்பாடி பழனிசாமிக்கு வாய் சுட்டுவிடுது? அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

திராவிடம் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்திற்கும் வாய் சுட்டுவிடும் - தாலிக்கு தங்கம் என்பதை ஜெயலலிதா கொண்டு வந்தார் ஆனால் கலைஞரின் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தில் இணைப்பு திட்டம் தான் அது - அதிமுக ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்காமல் ஊழல் செய்து தகரத்தை அதிகாரிகள் வழங்கியதாலே அந்த திட்டத்தை நிறுத்தினோம் - வேலூரில் முதல்வர் பிறந்த நாள் விழா பொதுகூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ,வ,வேலு பேச்சு

  வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது கூட்டமானது நடைபெற்றது.

   இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு கலந்துகொண்டு ஏழைகளுக்கு தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி,ஆட்டோ தொழிலாளர்களுக்கான சீருடை ஆகியவைகள் வழங்கினார். இவ்விழாவில் அதிமுக மாமன்ற உறுப்பினர் அஸ்மிதா அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

  பின்னர் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசுகையில், திராவிடம் என்பது சமூக சேவை அதைதான் பெரியார் அண்ணா கலைஞர் வலியுறுத்தினார்கள் அதைதான் தமிழக முதல்வர் தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்.

  ஆனால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகட்டும் ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகட்டும், அவர்களுக்கு எல்லாம் திராவிடம் என்று சொன்னால் வாய் சுட்டு விடும்.

  ஆகவே அவர்கள் திராவிடம் என்று சொல்லமாட்டார்கள்.

 மேலும் எடப்பாடி பழனிசாமி தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டதாக மேடைக்கு மேடை சொல்லி வருகிறார் ஆனால் கலைஞர் ஏற்கனவே கொண்டு வந்த ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தில் இணைக்கப்பட்டதே தாலிக்கு தங்கம் திட்டம்.

  தாலிக்கு தங்கம் என்பது திருமணத்திற்கு முன்னர் வழங்கபட வேண்டும் ஆனால் அது திருமணம் முடிந்து தான் அதிமுக ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டது.

 அதுவும் அதிமுக ஆட்சிகாலத்தில் விண்ணப்பித்த 3 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருந்தது  ஊழல் செய்த 42 அதிகாரிகள் தான் அதற்கு காரணம்.  அவர்கள் அதிமுக ஆட்சியின் போது தாலிக்கு தங்கம் வழங்கவில்லை அதற்கு பதிலாக தகரத்தை வழங்கினார்கள்.

 அதனால் தான் அதனை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ,1000 உதவி தொகை புதுமை பெண் திட்டம் மூலம் வழங்கபடுகிறது.

 ஆனால் நாங்கள் தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டதாக பொய்யாக கூறுகின்றனர் அதிமுகவினர் என்று எ.வ.வேலு அவர்கள் பேசினார்