ஞானவாபியில் சிவலிங்கம் இல்லை என மசூதி தரப்பு! இந்து தெய்வங்கள் இருப்பதாக வழக்கு:- தொழுகை தொடரலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்!

ஞானவாபியில் சிவலிங்கம் இல்லை என மசூதி தரப்பு! இந்து தெய்வங்கள் இருப்பதாக வழக்கு:- தொழுகை தொடரலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்!

டி.முகமது இர்ஃபான்,

 மசூதி...சிவலிங்கம்.... என்கிற இருதரப்பின் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தை தொட்டுள்ளது.

 அப்படியிருக்க ஞானவாபியில் சிவலிங்கம் இல்லை என மசூதி தரப்பு விளக்கம் சொல்ல, இந்து தெய்வங்கள் இருப்பதாக வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றன இந்து அமைப்புகள்.

 இந்நிலையில் மசூதியின் ஒரு பக்கம் சீல் வைக்கப்பட்டது, ஆனாலும் தொழுகை தொடரலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்!

இது பற்றின விவரம் வருமாறு,

  உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேற்படி வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரித்தனர்.

  திங்களன்று அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிஷங்கர் ஜெய்ன் எனும் வழக்கறிஞர் உள்ளூர் நீதிமன்றத்தை அணுகினார்.

 அந்த வளாகத்திற்குள் உள்ள குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறும், அப்பகுதிக்குள் எவரும் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் பனாரஸ் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 ஆணையர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டன்ட் ஆகியோரின் தனிப்பட்ட பொறுப்பு என்று உள்ளூர் நீதிபதி ரவி குமார் திவாகர் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

  இந்நிலையில் சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறப்படும் குளம் உள்ள பகுதியான 30க்கு 30 அடி அளவுள்ள இந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதாகவ்வும்,   மசூதியின் முக்கிய நுழைவாயில் அடைக்கப்படவில்லை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த குளம் உள்ள பகுதி மசூதி வளாகத்தில் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்று பனாரஸ் மாவட்ட ஆட்சியர் ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். 

 அப்படியிருக்க  குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல என்றும் செயற்கை நீரூற்று அமைப்பு (ஃபவுண்டைன்) என்றும்,  மசூதிக்கு வருபவர்கள் தொழுகைக்கு முன் தங்களை தூய்மைப் படுத்திக்கொள்வதற்கான குளம் என்று ஞானவாபி மசூதி நிர்வாகம் கூறியுள்ளது.

 இப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, 16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இங்கு மசூதி கட்டப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  18 ஆகஸ்ட் 2021 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் ராக்கி சிங் என்பவர் தலைமையில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் மா சிருங்கர் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதையை ஒட்டிய தசாஷ்வமேத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிளாட் எண் 9130இல் அன்னை சிருங்கர் தேவி, ஹனுமன் மற்றும் விநாயகர் மற்றும் அடையாளம் புலப்படாத இந்து தெய்வங்கள் இருப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு, மசூதியில் உள்ள தெய்வ சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு சனிக்கிழமை முதல் நாள் ஆய்வுக்காக அங்கு சென்ற பிறகு இந்த பெரிதாக பேசப்படுகிறது.

ஆக.......