புர்கா பிரச்சனையில் கர்நாடகா!!

டி.தியேடர்,
புர்கா அல்லது ஹிஜாப் என்பது இஸ்லாமிய பெண்களின் அடையாளமாக உள்ளது. கிட்டத்தட்ட அவர்களது கலாச்சாரமாகவும், மத கோட்பாடாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த சில முஸ்லிம் சிறுமிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.
ஒரு கல்லூரியை மையப்படுத்தி எழுந்த இந்த சர்ச்சை தற்போது தீவிரமடைந்து வருகிறது.
விவகாரத்தின் வீரியம் மாநிலம் முழுவதும் வேறு விதமாக பரவி வருகிறது.
பள்ளி கல்லூரிகளின் சீறுடைகளுக்குத்தான் முக்கியம் மற்ற ஹிஜாபின் போன்ற மத பின்பற்றுதல் கல்வியகங்களில் அனுமதிக்கப்படாது என்று ஹிஜாப் பிரியர்களுக்கு அம்மாநில கலவித்துறையினர் கைவிரித்துவிட்டனர்.
மேலும், கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2) ஐ அரசாங்கம் செயல்படுத்தியது, இந்த சட்டம் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று கூறுகிறது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ''கர்நாடகத்தில் அரசின் பி.யூ.கல்லூரிகளில் அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்யும் சீருடையை மாணவர்கள் அணிந்து வருவது கட்டாயம். ஒருவேளை சீருடை அணிவது கட்டாயமல்ல என்று நிர்வாகம் கூறினால், அங்கு சமத்துவம், ஒருமைப்பாட்டை காத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் இருக்கும் ஆடைகளை மாணவர்கள் அணிந்து வர அனுமதிக்கப்படுகிறார்கள். தனியார் பி.யூ.கல்லூரிகளில் அதன் நிர்வாகங்கள் முடிவு செய்யும் சீருடையை அணிய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமியர் அல்லாத பிரிவைச் சேர்ந்த மாணாக்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து எரிகிற தீயில் எண்ணைய் ஊற்றினர்.
பின்னர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனீஸ் பாத்திமா முஸ்லீம் பெண்கள் சீருடையுடன் பொருந்த கூடிய ஹிஜாபின் நிறத்தை மாற்றத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதை முழுவதுமாக விட்டுவிட முடியாது என்றும்
"சிறுமிகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் சொன்னார்.
தேர்வுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. புர்கா ஒன்றும் புதிதல்ல, எனவே அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்களும் கலபுர்கியில் உள்ள டிசி அலுவலகத்திற்கு வெளியே திரண்டுள்ளோம், முதலமைச்சரிடம் முறைடுவோம், அதில் பலனில்லை எனில் பின்னர் நாங்கள் உடுப்பியில் போராட்டம் நடத்துவோம்" என்கிறார்.
ஆனால் கர்நாடகாவில் ஏற்பட்டிருக்கும் ஹிஜாபின் விவகாரம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பது உண்மை.