வீசாத புயலுக்கு பெருமை அடித்துக்கொள்வதா? அரசை சாடும் மாஜி அமைச்சர்!

 வீசாத புயலுக்கு பெருமை அடித்துக்கொள்வதா? அரசை சாடும் மாஜி அமைச்சர்!

க.பாலகுரு,

வீசாத புயலை சமாளித்து விட்டோம் என திமுக அரசு பெருமை அடித்துக் கொள்கிறது. வரலாறு காணாத கஜா புயலையே உயிர் பலி இல்லாமல் சமாளித்தது அதிமுக அரசு என திருவாரூர் ஒன்றியம் புலிவலத்தில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு.

   மின் கட்டன உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியத்தில் புலிவலம் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்புச் செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கூட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில்,

   அனைத்து வரிகளும் உயர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. பழைய ஓய்வூதி திட்டம் உள்ளிட்ட அனைத்து வாக்குகளும் நிறைவேற்றவில்லை. எதற்கெடுத்தாலும் நிதி இல்லை என்ற காரணத்தை கூறுகிறார்கள் ஆட்சிக்கு வரும்பொழுது அவர்களுக்கு தெரியாதா?

 வீசாத புயலை சமாளித்து விட்டோம் என திமுக அரசு பெருமையடித்துக் கொள்கிறது. வரலாறு காணாத அளவிற்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கஜா புயலை எதிர்கொண்டு சமாளித்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. முதல்வரின் முன்னெச்சரிக்கை காரணமாக உயிரிழப்பு இல்லாமல் தவிர்த்தது அதிமுக அரசு.

  தனக்கு பின் தனது மகன், மகனுக்கு பின் பேரன் என்று தொடர்ந்து குடும்ப ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

 இதனை தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி கே யு. மணிகண்டன்,செந்தில்வேல், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி ,மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.