அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்கள்!

கு.அசோக்,
மாநகராட்சி பணிகள் சரிவர நடக்கவில்லை என அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை என திமுக மாமன்ற உறுப்பினர்களே குற்றச்சாட்டு - தூய்மை பணியாளர்களுக்கும் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும் வாக்குவாதம் பரபரப்பு.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மாநகராட்சி கூட்டமானது மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி மற்றும் துணை மேயர் சுனில் உள்ளிட்ட பலரும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிலைகுழு மண்டல குழு தலைவர்கள் பேசுகையில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, பாதாள சாக்கடை பணிகள் முடித்து சாலைகள் போடப்படாமல் உள்ளது, மேலும் ஆழ்துளை கிணற்றின் தண்ணீர் எடுக்கும் போர்வெல்கள் பழுதாகியும் பலமாதங்களாகியும் அவைகள் சீர் செய்யபடவில்லை என்றனர்.
மேலும் சின்டெக்ஸ் குடிநீர் தெட்டிக்ள் பழுதாகி ஓட்டையாகியும் உள்ளது இதனால் மக்களுக்கு குடிநீர் தட்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது இவைகள் குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் அவர்கள் மெத்தனமாக செயல்படுவதாக திமுக மாமன்ற உறுப்பினர்களே கூட்டத்தில் குற்றம்சாட்டி பேசினார்.
அதே போல், மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் 3 மாதங்களாக வழங்கபடவில்லை என பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் கூறி இதன் காரணமாக குப்பைகள் அகற்றபடாமல் பல வார்டுகளில் உள்ளதாக குற்றம்சாட்டினார்கள்.
மேலும் அதிகாரிகள் பல வார்டுகளில் பல முறை ஆய்வு செய்தும் அங்கு எந்த பணிகளும் சரியாக நடவடிக்கை எனவும் தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆகவே, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையிலும் அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறியதால் கூட்டம் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.