பிரஷ் காய்கறிகளை வழங்குங்கள்! ஆட்சியர் வேண்டுகோள்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அட்வகேட் ராமநாத நகர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகளிடம் விற்பனை குறித்தும் கேட்டறிந்தார்.
காய்கறிகள் பிரஷ் ஆக வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வியாபாரம் எப்படி நடைபெறுகிறது பொது மக்களின் ஆதரவு எப்படி உள்ளது என்றும் ஒவ்வொரு வியாபாரியாக கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து பிளாஸ்டிக் கவர் விலை தவிர்க்குமாறும் அறிவுரை வழங்கினார். வீணாகும் காய்கறி கழிவுகளை உரமாக்கும் மெஷின் செயல்பட்டு வருகிறது. கழிவுகளை ஓரமாக்கிய பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த உழவர் சந்தை பகுதியில் குளிரூட்டும் அறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ஆகவே காய்கறிகள் வைக்க ஏதுவாகவும் இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.