சசிகலாதான் 75 நாட்கள் ஜெயலலிதாவுடன் ஆஸ்பத்திரியில் இருந்தார்:-இளவரசி பகீர்!!

ம.பா.கெஜராஜ்,
பன்னிர் செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜரான இன்று சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் விசாரணைக்கு வந்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவை ஓரிரு முறைமட்டுமே பார்த்தேன். அதுவும் கண்ணாடிவழியாக பார்த்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி கூறியதாவது:- சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது, போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தங்கி இருந்தாலும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் என்னிடம் பகிர்ந்தது இல்லை.
ஆனால் வீடு குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார். கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு, மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். 2016 தேர்தலின்போது உடல்நலக்குறைவாக இருந்தது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டும்தான் உடன் இருந்து பார்த்துக் கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து வருவேன், 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை நான் கண்ணாடி வழியாக பார்த்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் பரபரப்பாக பேசப்படுகிறது.