பொம்பளை இன்ஸ்பெக்டர் அராஜகம்!

வி.டி.வித்யாசாகர், 

அப்பாவி பெண் ஒருவரை, பொம்பளை இன்ஸ்பெக்டர் அரை நிர்வாணப்படுத்தி தாக்கி ஜீப்பில் ஏற்றிச்சென்றார், அதனைக்கண்டித்த அரசியல்வாதிகளுக்கு பளார் என்று அறையும் விட்டார்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 ஆந்திர மாநிலம் காளஹஸ்தி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அஞ்சு. இவரை அஞ்சு யாதவ் என்றால் ஆந்திரா முழுக்க தெரியும். குறிப்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அஞ்சுவை மறந்திருக்கமாட்டார்.

 அப்படி பிரபலமான அஞ்சு அவ்வப்பொழுது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை.

 அந்த வகையில் தற்போது அவர் பணியாறும் காளஹஸ்தி பகுதியில் பெரிய சர்ச்சையில் சிக்கி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அஞ்சு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 இதுதான் காரணம்,

 காளஹஸ்தி பகுதியில் உள்ள நபரை புகார் தொடர்பாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் அஞ்சு தேடிச்சென்றபோது சம்மந்தப்பட்டவர் அங்கு இல்லை. ஆகவே அவரது மனையிவை ஸ்டேஷனுக்கு வா? வண்டியில் ஏறு என்று அழைத்துள்ளார் அஞ்சு. அதற்கு அந்தம்மா மறுக்கவே அவரை அடித்து புடவையை அவிழ்த்து வலுகட்டாயமாக போலிஸ் ஜீப்பில் ஏற்றிச் அழைத்துச் சென்றார்.

 இது தொடர்பான சங்கதிகள் வெளியானதும் பிரச்சனை வெடித்தது, எதிர்கட்சிகள் இந்த பிரச்சனையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வீதியில் இறங்கி போராடினர்.

 இதனால் டென்ஷனான இன்ஸ்பெக்டர் அஞ்சு, போராட்டக் களத்துக்கு தில்லாக வந்து அங்கு இருந்த சிலரின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார்.

 இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்ஸ்பெக்டர் அஞ்சு மீது வழக்கு பதிந்து விசாரணைக்கு அழைத்துள்ளது.

 குறிப்பு:- கடந்த 2003 ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியில் இருந்தார்.  அப்போது அவர் திருப்பதி திருமலைக்கு சென்ற போது அலிபிரி கேட் அருகே வெடிவிபத்தில் சிக்கினார். அப்போது முதல்வரின் கான்வாயில் இருந்த போலிசாரில் மேற்படி அஞ்சு யாதவும் இடம் பெற்றிருந்தார். அப்போது அவர் எஸ். ஐ. ஆக இருந்தார். அவர் தான் முதல்வரின் தூக்கி வீசப்பட்ட காருக்குள் குதித்து அவரை வெளியே தூக்கினார்.