அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை! உச் கொட்டிய மத்திய அமைச்சர்!

ஜி.கே.சேகரன்,
மத்திய அரசின் நிதியை சரியாக பயன்படுத்தவில்லை திட்டங்களும் சரியாக செயல்படுத்தப்படவில்லை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 36 ஆயிரம் வீடுகள் கட்ட வேண்டியுள்ளது ஆனால் 3 ஆயிரம் வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய அமைச்சர் ஆய்வுக்கு பின்னர் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் அதிகாரிகள் சரியான புள்ளி விவரங்களை அளிக்காததால் அமைச்சர் அவர்களை கடிந்துகொண்டார்.
பின்னர் சேக்கனூர் சதுப்பேரி,செம்பேடு ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார்
பின்னர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் செய்தோம் மத்திய அரசின் வளர்ச்சி திட்ட நிதிகள் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது குறித்தும் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தோம்.
ஆனால் அரசு அதிகாரிகள் ஒருவர் கூட முழுமையாக கூட்டத்தில் புள்ளிவிவரங்கள் இல்லை ஒத்துழைக்கவில்லை மேலும் மத்திய அரசு ஒதுக்கிய தொகைகள் குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.
நான் ஆட்சியரிடம் அடுத்த மாதம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் என்னென்ன நிதிகள் ஒதுக்கி பணிகள் செய்யப்பட்டது என முழு புள்ளி விவரமும் அளிக்க வேண்டும் என கூறியுள்ளேன்.
குறிப்பாக கிராமப்புற வளர்ச்சி,விடுதிகள் நிதி ஒதுக்கியது மட்டும் அவர்கள் புள்ளிவிவரங்களை வைத்துள்ளனர் ஆனால் அதிகாரிகள் என்ன தொகை மத்திய அரசு நிதியாக அளித்தது என்பதை சரியாக சொல்லவில்லை. தமிழக அரசு கீழ் செயல்படும் அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை கருவூலக கணக்குகளும் சரியாக இல்லை இது மிகவும் தவறானது வருத்தமளிக்கிறது.
மத்திய அரசு வேலூர் மாவட்டத்திற்கு பல திட்டங்களையும் பல கோடிகளையும் வழங்கியுள்ளது ஆனால் 36 ஆயிரம் வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி முடித்திருக்க வேண்டும், ஆனால் வேலூர் மாவட்டத்தில் வெறும் 3900 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தொகைகள் மற்றும் ஜல்ஜீவன் திட்டம் கீழ் ஆய்வு செய்தேன், ஒரு வீடுக்கு கூட நீர் வழங்கும் திட்டம் கூட சரியாக செயல்படுத்தப்படவில்லை.
மேலும் ஆதர்ஷ் கிராம திட்டம் குறித்த எந்த புள்ளி விவரமும் இல்லை இந்த திட்டத்தின் கீழ் 35 கிராமங்களில் வளர்ச்சிக்காக நிதி மத்திய அரசு ஒதுக்கியது ஆனால் வெறும் 6 கிராமங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துத்துறை கூட்டத்தை அடுத்த மாதம் நடத்தவுள்ளேன் இதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசு ஒதுக்கிய ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு அரசு சொல்ல வேண்டும் மேலும் சுகாதாரம் கல்வி,கிராமப்புற வளர்ச்சி ஒரே ரேஷன் கார்டு ஓரே நாடு திட்டம் ஆகியவைகள் குறித்தும் எந்த புள்ளி விவரமும் அவர்களிடம் இல்லை என்று வருத்தப்பட்டு சொல்லிக்கொண்டே போனார்.