ரவுடிகள் ஓசியில் பட்டாசு கேட்டு மிரட்டுவதாக டிஆர் ஓவிடம் புகார்!
கு.அசோக்,
பட்டாசுகள் கடைகளில் இரண்டு வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும் எளிதில் தீபற்ற கூடிய பொருட்களை கடையில் வைக்க கூடாது,அரசு விதிகளை பின்பற்றப்படவில்லை என்றால் பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் - பட்டாசு கடை உரிமையாளர்கள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேச்சு - பட்டாசுகள் விலை 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது மழையால் வியாபாரம் பாதிக்கபடும் இது ஒருபுறம் இருக்க ரவுடிகள் ஓசியில் பட்டாசு கேட்டு மிரட்டுவதாக பட்டாசு கடை உரிமையாளர் பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான அரசு வழிக்காட்டுதல் நெறிமுறைகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
இதில் வேலூர்,அனைக்கட்டு,காட்பாடி,குடியாத்தம்,கேவிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பட்டாசுகடைகளின் உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறை மற்றும் பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசுகையில் பட்டாசுகடைகளில் எளிதில் தீபற்ற கூடிய மின்சார ஒயர்கள் மெழுகுவர்த்திகள் ஆகியவைகளை வைக்க கூடாது. மேலும் கடையின் அருகில் யாரும் பட்டாசு சேம்பிள்ளை வெடித்து காண்பிக்க கூடாது மேலும் கடையின் அருகில் புகைபிடிக்க அனுமதிக்க கூடாது அரசு சொல்லிய அளவு மட்டும் பட்டாசு இருப்பு வைக்க வேண்டும் இரண்டு வழிகள் கடையில் கட்டாயம் இருக்க வேண்டும் அரசின் வழிக்காட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் கடையின் உரிமம் ரத்து செய்யபடும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் பாபு பேசுகையில் பட்டாசுகளின் விலை 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது மேலும் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது இதனால் தீபாவளி விற்பனை பாதிக்க கூடும் இது ஒருபுறம் இருக்க ரவுடிகள் ஓசியில் பட்டாசு கேட்டு கடைகளுக்கு வந்து தொந்தரவு செய்வதாகவும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென பேசினார்.