ஒருகட்டு கரும்பு கொடு…! அப்புறமா போ…! லாரிகளை மடக்கும் காட்டு யானைகள்!

ம.தமிழ்.
தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு ரெகுலராக கரும்பு லாரிகள் சென்று வருகிறது. அவற்றை மடக்கி நிறுத்தும் காட்டு யானைகள் கரும்புக்கட்டை இழுத்து போட்டு ருசித்த பின்னர் லாரிகளை அனுப்பிவைக்கின்றனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆசனூர் ,திம்பம் வழியாக கரும்பு லாரிகள் செல்லும்.
அதை நன்கு அறிந்த யானைகள் சாலையோரம் முகாமிட்டு கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்க்கின்றது.
அப்படியிருக்க தமிழக கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் வன சோதனைச் சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றிய லாரியை அங்கிருந்த பெண் யானை தனது குட்டியுடன் வழிமறித்தது.
லாரியை அடக்கி வாசித்த ஓட்டுநர் தாயும் சேயும் கரும்பை உருவி ருசிக்கும்வரை அமைதியாகவே இருந்தார்.
இந்தக்காட்சிகளை வாகன ஓட்டிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.