பெண்டாட்டி பேச்சை கேட்டு அண்ணனை கொலை செய்த தம்பி!

பெண்டாட்டி பேச்சை கேட்டு அண்ணனை கொலை செய்த தம்பி!

   கு.அசோக்,

  பெண்டாட்டி பேச்சை கேட்டு அண்ணை கொலை செய்துள்ளான் பாசக்கார தம்பி.

 திருப்பத்தூர்மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரின்  மகன்கள் கோவிந்தராஜ்(42) மற்றும் கனகராஜ் (40). இவர்கள் மரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனா.¢ இந்நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜன் மனைவி பூங்கொடி (39) பூ கட்டிக் கொண்டிருந்துள்ளார்.

  அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் வழியிலேயே அமர்ந்து கொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார்.

  இது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

  நடந்த சம்பவங்களை தன்னுடைய கணவர் கனகராஜிக்கு பூங்கொடி போன் செய்து கூறியவுடன், கோபத்தின் உச்சத்தில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கனகராஜ் தன்னுடைய மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிய அண்ணன் கோவிந்தராஜை கத்தியால் வெறித்தனமாக வெட்டியுள்ளார்.

  வெட்டுப்பட்ட கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

 சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கந்திலி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த கந்திலி காவல்துறை கோவிந்தராஜின் சடலத்தை  கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  அண்ணனை கொலை செய்த தம்பி கனகராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலிசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

   குடிபோதையில் தம்பியே அண்ணனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.