ஏலகிரி மலையில் புஸ்ஸ்ஸ்ஸ்...திட்டம்:-அரசு பணம் ஸ்வாகா!!

கு.அசோக்,
ஏலகிரி மலையில் பொது நிதி திட்டத்தின் கீழ் 19 லட்சம் மதிப்பில் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைத்தும் பயனில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் 2018 மற்றும் 19 ஊரக வளர்ச்சி பொது நிதி திட்டத்தின் கீழ் சுமார் 18 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது.
இருந்தும், இதுவரையிலும் அந்த திட்டம் எந்த ஒரு செயல்பாட்டுக்கு வராமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
"மேலும் ஏலகிரி மலையில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பைகள், கோழி இறக்கைகள், என அனைத்துக் கழிவுகளையும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து டிரேக்ட்டர்களில் கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டப்படுகிறது".
ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சரிவர தரம் பிரிக்காமல் கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள காலி இடங்களில் சுமார் 20 அடிக்குக் கீழே பள்ளம் தோண்டி குப்பைகளை புதைத்து விடுகின்றனர்.
அதேபோல் குப்பைகளை குழி தோண்டிப் புதைப்பதின் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.
இதை சுட்டிகாட்டிய பின்னர் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்களுக்கு மூச்சு திணறல், சுகாதாரமற்ற குடிநீர், நோய் தொற்றும் அபாயம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தனைக்கும் இப்பகுதியிகிருந்து 50 மீட்டர் தொலைவில் அத்தனாவூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது நினைவுகூறத்தக்கது ஆகும்.
ஆகவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.