விவசாய பயணாளிகளை போன் மூலம் அழைத்து கிராஸ் செக் செய்த மாவட்ட ஆட்சியர்!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வேளாண்மை - உழவர் நலத்துறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் சாதி சான்றிதழின் மெய்த்தன்மை சான்று, பழங்குடியினர் சாதி சான்று மற்றும் பட்டா உட்பிரிவு மாற்றம் ஆகிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து, இவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வுக்கானப்பட வேண்டுமென வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர், துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் மானிய விலையில் விற்பனைக்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை, துவரை, நெல், உளுந்து, கம்பு, ராகி, காராமனி ஆகிய விதைகள், மண் வெட்டி, தார்பாலின் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பதிவேட்டில் தார்பாலின் வாங்கிய ஆண்டியப்பனூர் ஊராட்சியை சேர்ந்த திரு.புகழேந்தி என்ற விவசாயிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொலைபேசி வாயிலாக திருப்பத்தூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்பாலின் வாங்கினிர்களா என்று கேட்டறிந்தார்.
மேலும் வேளாண்மை அலுவலர்கள் விவசாயிகளுக்கு நன்கு விவசாயம் செய்வது குறித்து பயிற்சி வழங்கிட வேண்டும் எனவும் அந்த பயிற்சியில் சிறப்பான முறையில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் மூலமாக விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த கொள்ளு தானியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த விற்பனை கூடத்தில் விலைபொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும், அப்போது தான் விவசாயிகளுக்கு உரிய அதிகபடியான விலை கிடைக்கும் எனவும் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி விவசாயிகளுக்கு சென்று சேருகின்ற வகையில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என வேளாண்மை துறை அலுவலர்களுக்கு ஆட்சித்தலைவா அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது வருவாய் கோட்டாட்சியர் திரு.இராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.கண்ணகி, வட்டாட்சியர் திரு.அனந்தகிருஷ்ணன், ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலர்கள்; கலந்துகொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.