வலுக்கும் பாலாறு போராட்டம்! விவசாய கூட்டமைப்பினர் பங்கேற்பு!

வலுக்கும் பாலாறு போராட்டம்! விவசாய கூட்டமைப்பினர் பங்கேற்பு!

G.K.சேகரன்,

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய ஆந்திர அரசை கண்டித்து பாலாறு பாதுகாப்பு கூட்ட இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை,1892 மைசூர் ராஜ்ஜியம் மற்றும் சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தையும் மீறுகிறார்கள் என்றும்,

ஆகவேபாலாற்றின் குறுக்க தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக் கோரி முழக்கமிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவை இருக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க கோரியும்உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மதிக்காமல் தனித்துவமாக செயல்படும் ஆந்திர அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்தினர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் முல்லை மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அசோகன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்கள் கலந்து கொண்டது.

திருப்பத்தூர்மாவட்டம்     வேலூர்     1-3-24

திருப்பத்தூர் பாரத் ஸ்டேட் பேங்க் முன்பு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய ஆந்திர அரசை கண்டித்து பாலாறு பாதுகாப்பு கூட்ட இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 1892 மைசூர் ராஜ்ஜியம் மற்றும் சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தை மீறி அராஜக போக்குடன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளது மேலும் பாலாற்றின் குறுக்க தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவை இருக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க கோரியும்உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மதிக்காமல் தனித்துவமாக செயல்படும் ஆந்திர அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்தியும்தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் முல்லை மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அசோகன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்கள் கலந்து கொண்டது.