அதிமுக கூட்டணியில் தேமுதிக அதிக டிமாண்ட்? முடிவுக்கு வர முடியாமல் திணறல்!!

U.சசிகுமார்,
திமுக நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கூட்டணியை கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.
இதில் அதிமுக கூட்டணி அமைக்க தென்னரி வருகிறது என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்று மாலை அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே பி அன்பழகன் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் பிரேமலதா வீட்டிலிருந்து வெளியே வந்த போது முகம் இறுகி காணப்பட்டது.
அப்போது செய்தியாளர்கள் கூட்டணி பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு வேலுமணி பதிலளிக்கையில் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினோம். இருதரப்பும் குழு அமைக்கப்பட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேமுதிக தலைமையிடம் என்னதான் பேசினார்கள் என்று விசாரித்த போது, தேமுதிக தரப்பில் பிரேமலதாவும் அவருடைய தம்பி சுத்தீஷும் சீட்டு அதிகம் கேட்பதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் செலவு குறித்தும் கொஞ்சம் அதிகமாகவே பேசப்பட்டதாம்.
இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை உடனடியாக முடியவில்லை.