ஒசூர் டூ பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம்! பயணிகள் நிம்மதி மூச்சு!!

ஒசூர் டூ பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம்! பயணிகள் நிம்மதி மூச்சு!!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

டிராபிக் நிறைந்த ஓசூர் டூ பெங்களூரு இடையிலான மெட்ரோ வழித்தடம் தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்ய திட்டம் போட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டுள்ளது.  

 இந்த பணியானது, தென்னிந்திய அளவில் முதல் இண்டர் ஸ்டேட் மெட்ரோ ரயில் சேவைக்கான பணி என்பது நினைவுகூறதக்கதாகும்.

   தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் தினசரி எல்லைகளை கடந்து திரும்புபவர்களுக்கு பெரிதும் தலைவலியாக இருப்பது போக்குவரத்து நெரிசலாகும். இந்த நிலையை கலைய தமிழகம் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான முதல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

 ஏற்கனவே டெல்லி மெட்ரோ ரயில் சேவை உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

  ஓசூர் டூ பெங்களூரு மெட்ரோ ரயில் சேவைக்கு நடப்பாண்டின் தொடக்கத்தில் தான் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை அனுமதி அளித்தது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஓசூரில் இருந்து பெங்களூருவில் உள்ள பொம்மசந்திரா வரை 20.5 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைத்து மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இதில் 12 கிலோமீட்டர் தூரம் கர்நாடகாவிலும், 8.5 கிலோமீட்டர் தூரம் தமிழகத்திலும் வருகிறது. முன்னதாக பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை மஞ்சள் லைனில் வழித்தடம் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

  இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் ஓசூர் நகருடன் பெங்களூருவை இணைப்பது எளிதாகி விடும். ஏனெனில் மஞ்சள் லைன் மெட்ரோ ஆனது பச்சை மற்றும் சிவப்பு வழித்தட மெட்ரோ உடன் இணைக்கிறது. இவை பர்பிள் வழித்தட மெட்ரோ உடன் இணைக்கின்றன. மேலும் மஞ்சள் வழித்தட மெட்ரோ உடன் நீல நிற வழித்தடமும் இணைக்கப்பட உள்ளது. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு பயணிக்க செய்துவிடும்.

தமிழகத்தையும், கர்நாடகாவையும் இணைக்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  மேற்கொண்டு வருகிறது. தொழில் நகரான ஓசூரையும், ஐடி நகரான பெங்களூருவும் மெட்ரோ ரயில் மூலம் இணைப்பது வர்த்தக ரீதியில் பெரிய உயர்வை கொடுக்கும்.

   மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய டெண்டர் விடப்படவுள்ளது. இதன்மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்த வழியாக பாதை அமைக்கலாம். எங்கெல்லாம் ரயில் நிலையங்கள் கொண்டு வரலாம். எவ்வளவு செலவாகும். மெட்ரோ, மெட்ரோ லைட், மோனோ ரயில் ஆகியவற்றில் எது சரியாக இருக்கும் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும் என தெரிகிறது.

  இந்த திட்டம் முடிவு பெறும் நிலையில் அவ்வழியை உபயோகித்துவரும் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள்.ளானால் பணிகள் தொடங்கி முடிவடைவதற்குள் போக்குவரத்து நெரிசல் நாக்கை தள்ளிவிடும்.