போப் பிரான்சிஸின் இறுதி ஆசை! லத்தீன் மொழில் பெயரை எழுதுங்கள் ....வாடிகனுக்கு வெளியில் அடக்கம் செய்யுங்கள்.....!

போப் பிரான்சிஸின் இறுதி ஆசை! லத்தீன் மொழில் பெயரை எழுதுங்கள் ....வாடிகனுக்கு வெளியில் அடக்கம் செய்யுங்கள்.....!

த.நெல்சன்,

 கத்தோலிக்க மதத்த்தி உலகலாவிய தலைவரான போப் ஆண்டவர் நேற்று காலை காலமானார். பெருமூளை பக்கவாதம், இதயம் செயலிழப்பு, கோமா என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவர் உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிவித்துள்ளது.

  போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளன. இந்நிலையில் போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும்? அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    முதல் லத்தீன் அமெரிக்க போப் ஆண்டவரான பிரான்சிஸ் எழுதி வைத்துள்ள இறுதி சாசனத்தில் தனது உடலை வாட்டிகனில் அடக்கம் செய்ய வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடிகனுக்கு வெளியே, ரோமில் உள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில், தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  அலங்காரம் இல்லாமல் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது இறுதி சாசனத்தில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடக்கம் செய்யப்படும் இடத்தில் தனது பெயர் லத்தீன் மொழியில் பொறிக்கப்பட வேண்டும் என்றும் தனது இறுதி சாசனத்தில் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதனால் போப் ஆண்டவரின் உடல் வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போப் ஆண்டவர் உடல் வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டால், நூற்றாண்டுக்கு பிறகு வாடிகன் நகரத்திற்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆண்டவர் என்ற பெயரை போப் பிரான்சிஸ் அவர்கள் பெறுவார்.