இரண்டு மாடி செருப்பு குடோனில் தீ!

கு.அசோக்,
வேலூர் சைதாப்பேட்டை, ராமர் பஜனை கோவில் பகுதியை சேர்ந்தவர் முகுந்தன். இவருக்கு சொந்தமான இரண்டு மாடி கொண்ட வீட்டை செருப்பு தைக்கவும், அதனை ஸ்டாக் வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வருகிறார். நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்ட சூழலில் அனைவரும் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது எப்.எம்.ரேடியோவை ஆப் சேய்யாமல் சென்றதாகவும். மீண்டும் மின்சாரம் வந்த நிலையில் தொடர்ந்து இயங்கிய எப்.எம். ரேடியோவால் மின் கசிவு ஏற்பட்டு இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
பிளாஸ்டிக் காலணிகள் என்பதால் தீ பரவி இரண்டு மாடியும் எரிந்து நாசமாகியுள்ளது. இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.