நெஞ்சு வலிக்காரரை தடுத்த போலீசார்!

நெஞ்சு வலிக்காரரை தடுத்த போலீசார்!

ஜி.கே.சேகரன்,

 சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ள மாற்றுத்திறனாளிகள், வேலூரில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாவட்ட துணை தலைவர் நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது காவல்துறை தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு.

 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உதவி தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் சென்னையில் சட்டமன்ற தொடர் முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது.

 இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாத வகையில் செஞ்சி கிராமத்தை சேர்ந்த வேலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் துணை தலைவர் கோபால ராஜேந்திரன் நேற்று இரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

 இந்நிலையில் அவருக்கு திடீரென நள்ளிரவு உடல்நல குறைவு ஏற்பட்டதால் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது மருத்துவமனைக்கு செல்லவிடாமல் காவல்துறையினர் பாதி வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

  வீட்டு காவளில் வைக்கப்பட்டதற்கு உரிய காரணம் கூறாமலும், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட சூழலில் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்காமல் நள்ளிரவில் நடுரோட்டில் தடுத்து நிறுத்துவதாக கூறி உறவினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தற்போது கோபால ராஜேந்திரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.