வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான ஏற்பாடு! வேலூர் ஆட்சியர் விளக்கம்!

வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான ஏற்பாடு! வேலூர் ஆட்சியர் விளக்கம்!

 ம.பா.கெஜராஜ்,

வேலூர் மாவட்டத்தில் ஏழு வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.        இவற்றை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்   ஆய்வு செய்தனர்.

  இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலை கீழ்கண்டவாறு நடைமுறை விதிகளின்படி வாக்கு மையங்களில் அனுமதிக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . பெ . குமாரவேல் பாண்டியன் , இ.ஆ.ப . , அவர்கள் தெரிவித்துள்ளார்.

  வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 - ஐ நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி காட்பாடி , கீ.வ.குப்பம் , குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 06.10.2021 அன்றும் வேலூர் , கணியம்பாடி மற்றும் அணைக்கட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 09.10.2021 அன்றும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

  ற்போது 12.10.2021 அன்று காலை 8.00 மணியளவில் பின்வரும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்ட வேட்பாளர் மட்டுமே வாக்கு எண்ணும் போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல முடியாத நேர்வுகளில் அவரால் அங்கீகரிக்கப்படும் ஒரு நபர் மட்டும் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்.

  ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் தேர்தலை பொறுத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை பொறுத்தவரையில், வாக்குப் பெட்டிகளை திறப்பது மற்றும் தொடக்க நிலை எண்ணுகை ஆகியவற்றை கவனிப்பதற்கென தொடர்புடைய வகை பிரிவு மேசை ஒவ்வொன்றுக்கும் வாக்கு எண்ணுகை முகவர் அனுமதிக்கபடுவர்.

  வாக்கு எண்ணுகை அறையில் ஒவ்வொரு வாக்கு எண்ணும் வாக்கு எண்ணுகை மேசையிலும் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை முகவரும் தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசையிலுள்ள பணியை கவனிப்பதற்கென கூடுதல் வாக்கு எண்ணுகை முகவர் ஒருவரும் அனுமதிக்கப்படுவர்.

   வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறியீட்டு சின்ன அட்டை அணிந்திருக்க வேண்டும்.

   அக்குறியீட்டு சின்னமானது முகவர் மற்றும் வேட்பாளரின் அடையாளத்தையும் , அவர் எந்த மேசையின் வாக்கு எண்ணிக்கையை கவனிக்கிறார் என்ற விவரத்தினையும் குறித்திருக்க வேண்டும்.

   வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் வேட்பாளர் , வேட்பாளரின் முகவரை தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை . மேலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் , வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு கைபேசி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.

  ஊடகத்துறை பணியாளர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொடர்பு அலுவலர் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  மேலும் ஊடக பணியாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கையொப்பமிடப்பட்ட அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் . செய்தி வெளியீடு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், வேலூர்.