அரசு திட்டங்கள் வீடு தேடிவரவே இது போன்ற கூட்டம்! வேலூர் ஆட்சியர் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
அரசு திட்டங்கள் வீடு தேடிவரவே இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறாது. வேலூர் கிராமப்புறங்களில் மாசு ஏற்படாமல் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கிராமங்களுக்கு தேவையான குடிநீர் சாலைவசதிகள் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி குறைகளை தீர்க்கவே கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது - வெங்கடாபுரத்தில் நடந்த கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் பேச்சு
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அருகேயுள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டமானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் பாபு மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் அமுதா ஞானசேகரன் உள்ளிட்ட பலரும் கிராம மக்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் அரசு திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு சென்று சேர திட்டங்கள் வீடு தேடிவர வேண்டும் அதற்காக தான் இதுபோன்ற கூட்டங்களை அதிகாரிகளையும் மக்களையும் வைத்து நடத்துகிறோம்.
குறிப்பாக சாலைகள் அமைத்தல் குடிநீர் வசதிகள் கழிவுநீர் அகற்றல் குப்பை தரம் பிரித்து அகற்றல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தரவேண்டும் என்பதற்காக நிதிகள் ஒதுக்கி செய்து தரப்படும் அரசு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவைகள் மக்கள் பயன்பெற பயனாளர்களை தேர்வு செய்ய ஏற்பாடுகள் செய்கிறோம் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து கிராமப்புறங்களில் மாசில்லாமல் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் எனவும் பேசினார்.