ஆற்காட்டில் வெடிகுண்டு விபத்து:- பலி காயம்!

கு.அசோக்,
ஆற்காடு அருகே பன்றிகளை கொன்று பிடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டை தயாரித்த போது குண்டு வெடித்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிளைவ் பஜார் பகுதியை சேர்ந்த முருகனுக்கு சொந்தமான வீட்டில் பன்றிகளை பிடிப்பதற்காக நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் முருகன் உயிரிழந்து உள்ளார்.
மேலும் முருகனின் மகன் பகவதி வலது கை துண்டான நிலையில் ஆற்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆற்காடு தீயணைப்புத்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.