பள்ளிகூடம் வந்த பாம்பு! ஆட்சியரும் ஓடோடி வந்தார்!

பள்ளிகூடம் வந்த பாம்பு! ஆட்சியரும் ஓடோடி வந்தார்!

 ஜி.கே.சேகரன்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி கட்டிடம் தரமற்றது எனக்கூறி பள்ளியைவிட்டு வெளியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

 திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்தூர் அடுத்த அணேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

 இங்கு சுமார் 116 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இந்த நிலையில் நேற்று இப்பள்ளியின் மேற்கூரையில் பாம்பு ஒன்று சென்றதாக மாணவ மாணவிகள் பார்த்து ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

 இதன் காரணமாக ஆசியர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பள்ளியில் பாம்பு சென்றய்து குறித்து கூறி உள்ளனர்.

 எனவே ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 ஆனால் அவர்கள் யாரும் வராததால் பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவருடைய பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறினர்.

  பள்ளிக்கு வந்த மாணவர்கள் புளியமரம் வெளியில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

 தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினரை வரவழைத்து பாம்பை பிடிக்க உத்தரவிட்டார்.மேலும் பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் சமாதானம் பேசி கட்டிடங்களை சீரமைக்க தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் திரும்பவும் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பறைக்கு சென்றனர்.

 ஆனால் கடைசிவரை பாம்பு சிக்கவேயில்லை.