வடக்கு மண்டலத்தில் போதை வஸ்து ரைடு! இராணிப்பேட்டை - திருப்பத்தூரில் மூட்டை மூட்டையாக பறிமுதல்!

கு.அசோக்,
காவல் துறையில் வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ராகார்க் இ.கா.ப.அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போதை வஸ்துவான குட்காவை அறவே ஒழிக்க கூட்டு ரைடு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம்,
சோளிங்கரில் பஜார் தெருவில் உள்ள சில கடையில் குட்கா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட கடையில் சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.
உடனடியாக அவருக்கு சொந்தமான லிங்கா ரெட்டி தெருவில் இருக்கும் குடோனை சோதனை செய்தனர்.
அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 15 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து உரிமையாளர் ரமேஷ் குமார் (29), பேரா ராம் தேவாசி (20) இருவரையும் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
இங்கு இரண்டாவது நாளாக போலீசார் அதிரடி சோதனை 452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து 2-ஆவது ரைடு நடத்தப்பட்டது.
காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 268 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்களாபுரம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிந்து குமார் (24) என்பவர் நடத்திய கடையில் சுமார் 80 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
நாட்டறம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன்(28) என்பவர் நடத்திய கடையில் சுமார் 81 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் (48 ) என்பவர் நடத்திய கடையில் சுமார் 400 கிராம் குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
திருப்பத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டபாணி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த 1.லட்சுமணன் (55),2.பிரசாந்த்குமார் (31), 3.அல்லா பக்சித் (29) (தலைமறைவு) ஆகிய மூன்று பேர் நடத்தி வருகிற மளிகை கடையில் சோதனை செய்ததில் சுமார் 23 கிலோ குட்கா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அவர்களின் வங்கி கணக்கு முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்படக்கூடியது ஆகும்.
ஆனால் வேலூரில்?