காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வணிகர் சங்கம் கோரிக்கை!

கு.அசோக்,
தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் சுங்கச்சாவடிகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் இல்லையென்றால் டெல்லியில் வணிகர்கள் போராட்டத்தை துவங்குவோம் காட்பாடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் வேலூர் திருவண்ணாமலை ,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்ட வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்டத்தலைவர் ஞானவேல்,மற்றும் மாவட்டங்களை சேர்ந்த அருண்பிரசாத்,ரங்கநாதன்,சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துக் கொண்டனர்.
அதில், உள்ளாட்சி கடைகளுக்கு நகராட்சி பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறையின் கடைகளுக்கு சட்டத்திருத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கபேரமைப்பின் சார்பில் உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சி கடைகள் வாடகை குறித்து கூட்டம் நடந்தது கடையின் வாடகை ரூ.700 - ரூ.20 ஆயிரம் வரையில் உயர்த்தபடுகிறது.
இந்த வாடகை உயர்வு மக்களையும் வணிகர்களையும் பாதிக்கும். இதனை ஒரே சீராக இருக்க வேண்டும்.
நியாயமான முறையில் வாடகை உயர்த்த வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடைகளை இடிக்கும் போது ஏற்கனவே கடை வைத்துள்ள வணிகர்களுக்கு கடை தரப்படும் என உறுதியை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி நகராட்சி மாநகராட்சி கடைகள் 2 லட்சம் உள்ளது இதனை பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து கமிட்டி ஒன்றை அமைத்து நியாயமான வாடகையை அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் 83 ஆம் பக்கம் உள்ளாட்சி, நகராட்சி கடையின் வாடகையை சீர் செய்வதாக கூறியிருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
மக்கள் நல்வாழ்வு அமைச்சரை வைத்து உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகளுடன் தமிழகம் முழுவதும் வணிகர்கள் கூட்டம் நடத்தவுள்ளோம்.
உற்பத்தியை முதல் சீர் செய்ய வேண்டும். பொருள் உற்பத்தியாகும் இடத்தை அதிகாரிகள் சோதிக்க வேண்டும்.
மே,5 தின மாநாடு வரும் ஆண்டு கொரோனா ஆண்டு இல்லாத ஆண்டாக அமைந்தால் மாநாடு வெற்றிகரமாக நடத்தபடும்.
சுங்கச்சாவடிகள்,சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் அகற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றவும், காலாவதியான சுங்கசாவடியை அகற்றவும் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோர உள்ளோம். இல்லையென்றால் வணிகர்களின் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்றார்.