புதிய புரட்சியை ஏற்படுத்தும் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு!

ம.பா.கெஜராஜ்,
தமிழக சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார்.
அந்த வகையில் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் "முதல்வர் மருந்தகம்" திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு சந்தையில் கிடைப்பதை விட 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு மருந்துகள் வாங்கலாம்.
ஏற்கனவே இதுதொடர்பாக அறிவிப்பு கடந்த 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது வெளியானது. அதன்பிறகு முதல்வர் மருந்தகம் நடத்துவது, சரியான நபர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவது, இடம் தேர்வு, மானிய சலுகைகள் எனப் பல்வேறு விஷயங்களில் படிப்படியாக செய்யப்பட்டு வந்தன.. இவை அனைத்தும் முழுமை பெற்ற நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
கூட்டுறவு சங்கம் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளன. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மேற்பார்வையில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இது மத்திய அரசின் மருந்தகத்தை விட 20 சதவீதம் குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்கி கொள்ளலாம். இதனை நடத்துவதற்கு பி-பார்ம் அல்லது டி பார்ம் படிப்பை முடித்தவாகளோ அல்லது அந்த சான்று வைத்துள்ளவர்களுடன் ஒப்பம் விண்ணப்பிக்கலாம்.
மருந்தகம் அமைப்போருக்கு அரசு மானியம் வழங்கப்படும். இரண்டு தவணைகளில் 3 லட்ச ரூபாய் கிடைக்கும்.
இது ரொக்கமாகவும், மருந்தாகவும் அளிக்கப்படும். ஜெனரிக், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, சர்ஜிக்கல் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கிடைக்கும். இதில் இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் மருந்துகள் வாங்க முடியும். தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பாக இத்திட்டம் இருக்கும்.
அதுமட்டுமின்றி சுகாதாரத்துறையில் இது ஒரு புரட்சிகர திட்டமாக இருக்கும்.
ஏழை எளிய மக்களின் மீது அக்கறை கொண்டு முதல்வர் அறிமுகப்படும் இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முனைய வேண்டும்.