அம்மா மருந்தகங்களை மூடி மறைக்கவே முதல்வர் மருந்தகம் திறப்பு? முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி காட்டம்!

அம்மா மருந்தகங்களை மூடி மறைக்கவே முதல்வர் மருந்தகம் திறப்பு? முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி காட்டம்!

ஜி.கே.சேகரன்,

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா மருந்தகங்களை மூடி மறைக்கவே முதல்வர் மருந்தகங்களை இன்று திறந்துள்ளனர் முன்னாள் அமைச்சர் வீரமணி திருப்பத்தூரில் பேச்சு

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  77ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    கந்திலி ஒன்றியக்கழக செயலாளர் டி.டி.சி.சங்கர் மற்றும் நகர கழக செயலாளர் குமார் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இதில் முன்னால் அமைச்சரும்,

மாவட்ட கழக செயலாளாருமான கே.சி. வீரமணி கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதாவின்  திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 அப்போது பேசிய வீரமணி தமிழகத்தில் அம்மா மருந்தகங்களை மூடி  முதல்வர்  மருந்தகங்களை திறந்து வருகிறார்.மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் மலரும். அப்போது அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

 பின்னர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானம் வழங்கினா.