ஆளுங்கட்சி எம்.பி.கொலை! கொதிக்கும் இலங்கை!!139 பே காயம்!!

ஆளுங்கட்சி எம்.பி.கொலை! கொதிக்கும் இலங்கை!!139 பே காயம்!!

டி.முகமது இர்பான்!

அரசு ஆதரவாளர்களுடன் இலங்கையில் மக்கள் மோதலில் ஈடுபட்டதால் அங்கு மேலும் பிரச்சனை வெடித்திருக்கிறது.

 இலங்கையின் ஆளும் கட்சி மற்றும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததில், ஒரு மூத்த எம்.பி. இறந்தார், பலர் காயமடைந்தனர், போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

  நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல நிட்டம்புவவில் அவரது காரை மறித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய முயன்றபோது இறந்து கிடந்தார்.

   ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பைத் தூண்டிய நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வர்த்தக தலைநகர் கொழும்பில் மோதல்கள் வெடித்தன. எ.எப்.பி. அறிக்கையின்படி, இலங்கை மோதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 139 பேர் காயமடைந்தனர்.

  இதேவேளை, மோதல்கள் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகினார்.

“சில நிமிடங்களுக்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்தார்” என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   "தற்போதைய நெருக்கடிக்கு ஒரு இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே சிறந்த தீர்வு என்று பல கூட்டணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்," என்று கடிதம் கூறியது, அதன் நகலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறூவனம் பார்த்து உறுதிபடுத்தியுள்ளது.

   முன்னெப்போதும் இல்லாத வகையில் பல வாரங்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, 22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மூத்த சகோதரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதற்காக பதவி விலகுமாறு கோரின என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்புவை ஒட்டிய சில பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை தலைநகர் கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகளில் உடனடியாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போதாகுறைக்கு பல இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.