ஓபிஎஸ் - இ.பி.எஸ்.வெற்றி! பதவியேற்றனர்!

  ம.பா.கெஜராஜ்,

  ஓபிஎஸ். மற்றும் இ.பி.எஸ்.வெற்றி பெற்ற நிலையில் அவர்கள் முறையே  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக பதவியேற்றுக் கொண்டனர்.

 அ.தி.மு.க.,வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு , வரும் , 7 ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும்,

 போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர் இன்று மதியம் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்காக 150 பேர் விண்ணப்பித்தனர்.

 ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் வேட்பு மனுக்களை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

  வேறு யாரும் மனு அளிக்கவில்லை என்பதால் இபிஎஸ் - ஓபிஎஸ்  அவர்கள் 2 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அவர்கள் உடனடியாக பதவி ஏற்றனர்.