அலுவலரை ஆட்டம் காட்டிய ஆடு! வீடியோவை பாருங்கள்!

  டி.முகமது இர்பான்,

  அரசு அலுவலரை ஆட்டம் காட்டிய ஆடு இன்றைக்கு வைரலாகிள்ளது.

  பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கிருந்த ஆவணத்தை வாயில் கவ்வி கொண்டு ஓட, அதை அலுவலர் விரட்டி பிடிக்க பின்னாடியே ஓடினார்.

   இதை வீடியோ எடுத்தவர் அந்த காட்சிகளை வாட்ஸாப்பில் போட்டுவிட்டார். அது தான் இப்போது வைரலாகிவருகிறது.

   உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் ஷவுக்பிபூரில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது.

   இந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்துவந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

  அப்போது, பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் சென்ற ஆடு அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணம் ஒன்றை தனது வாயில் கவ்வி தூக்கிச்சென்றது. அலுவலகத்திற்குள் ஆடு நிற்பதை கண்ட அலுவலர்கள் அதை விரட்ட முயற்சித்தனர்.

  இதனால், ஆவணத்தை தனது வாயில் கவ்விய ஆடு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

  ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓடிய ஆட்டை அலுவலர் விரட்டி செல்ல ஆடு நிற்காமல் ஓடி ஆட்டம் காட்டியது.

ஆவணத்தை கிழே போடாமல் ஓடிய ஆடு இறுதியாக அதை கிழித்து மென்று தரையில் போட்டுவிட்டு, அந்த அலுவரை ஏளனமாக பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது.