சோளிங்கரிலும் முதல்வர் மருந்தகம் துவங்கப்பட்டது!

சோளிங்கரிலும் முதல்வர் மருந்தகம் துவங்கப்பட்டது!

கு.அசோக்,

 இராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகே அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர்.

  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மலிவு விலை ஆயிரம் மருந்தகங்கள் திறக்கும் நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.

 இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி மருந்துகத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

 நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.