பூட்டுத்தாக்கு ஊராட்சியில் 1கோடியே 13லட்சத்தில் ஊழல்! சிக்கப்போகும் பிரதிநிதிகள்!

பூட்டுத்தாக்கு ஊராட்சியில் 1கோடியே 13லட்சத்தில் ஊழல்! சிக்கப்போகும் பிரதிநிதிகள்!

வ.தர்மேந்திரன்,

 இராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக உள்ளாட்சி சட்டம் 205ன் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டபூர்வ அறிக்கை 30--1--2025 அன்று கொடுத்த நிலையில் பிரச்சனை முற்றியிருக்கிறது.     

  ஆனால் இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊரக வளர்சசிப்பிரிவு முக்கிய அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுக்காமல் இந்த ஊழலில் சம்பந்தபட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதுடன், ஊராட்சி செயலாளரை பலிகடா ஆக்கி தலைவரை தப்புவிக்க முயன்றுள்ளார்.

  இதனால் அவரும் உயர் அதிகாரிகளிடம் வாங்கிக்கட்ட்டிக் கொண்டிருக்கிறார்.

 இருந்த போதும் ஊராட்சி செயலாளரிடம்  ஊரக வளர்சித்துறை அரசு ஊழியர்கள் சங்கம் தலையிடுவதாகவும், சங்க நிர்வாகிகள் ஊராட்சி செயலாளரிடம் பேரம் பேசி தீர்மானங்களை திருத்தியது மற்றும் பதிவேடுகளில் உள்ள திருத்தங்களை மேற்கொண்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என கட்டாயபடுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 அதற்க்கு ஈடாக ஒரு பெரும் தொகை தருவதாகவும், இடைத்தரகர் வேலையை வளர்சிப்பிரிவு முக்கிய அதிகாரி  ஒருவர் கன கச்சிதமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

 பூட்டுதாக்கு ஊராட்சியில் 2023--2024 ஆண்டு சுமார் 1கோடியே 13லட்சம் வரவு செலவு ஆனதாம் அதில் பல செலவுளுக்கு செலவு வவுச்சர்கள் இல்லையாம் அதையெல்லாம் மறைத்து, சாதரண குறைபாடு முதலில் ரூபாய் 40 லட்சதத்தில் என தணிக்கை அறிக்கை தயார் செய்து முடிக்க முயன்ள்ளனராம்.

 அதற்கு கமிஷனாக பெரும் தொகை கொடுப்பதாக பேரம் பேசினார்களாம்,

 மேற்கண்ட தகவல் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் சந்தான கோபல் என்கிற நேர்மையான அதிகாரியின் பார்வைக்கு சென்றது.

 பின்னர் அவர் ஆய்வு செய்து பூட்டுத்தாக்கு ஊராட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடினால் அரசுக்கு நிதியிழப்பு  ஏற்பட்டிருக்கிறது எனன அறிக்கை வழங்கியுள்ளாராம்.

 அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா மற்றும்  மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா ஆகியோர் பார்வைக்கு சென்றால் ஊழல் பெருச்சாலிகளுக்கு ஆப்புதான் என்கிறார்கள்.

 இதனாலேயே உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் திரு சந்தானககோபால் வழங்கியுள்ள அறிக்கையை உரிய வகையில் சமர்பிக்காமல் காலம் கடத்துவதாக கூறப்படுகிறது.

 குறிப்பு:- உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட வேண்டுமாயின், ஊராட்சியின் ஆண்டு முழுவதும் செய்த வரவு செலவு தொகைக்குக்கு 1% தணிக்கை அதிகாரிகளுக்கு  வழங்குவது நடைமுறையாம்.

"அட போங்கடா நீங்களும் உங்கள் டீலிங்கும்"