டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து கெஞ்சிய எம் .எல். ஏ.!

த.முனிசாமி,
கடந்த மாதம், பா.ம.க. அருள் எம்.எல்.ஏ தலைமையில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடையில் பூட்டு போடும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது கடையை ஒரு மாதத்தில் வேறு இடத்திற்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டது. ஒரு மாதம் முடிந்த நிலையில், நேற்று ஒரு விழாவிற்காக அருள் எம்.எல்.ஏ அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கடை மூடப்படாமல் அதே இடத்தில் செயல்படுவதாக கூறி கடைக்கு வெளியே நின்று சத்தமிட்டார்.
மேலும் டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து கடையை அகற்றுமாறு கெஞ்சினார். உடனிருந்தவர்கள் அவரை தூக்கி விட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன் என்றும், மேலும் நீதிமன்றம் மூலமாக சட்டப் போராட்டத்தை கையில் எடுப்பேன் என்றும் அருள் தெரிவித்தார்.
சும்மா வாசியுங்களேன்:- ko மாணவர்களுக்கு பொது இடத்தில் தோப்புகரணமா? தீயணைப்பு அலுவலர்களை கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகள்!
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி செம்மண்கூடல், கருக்கல்வாடி, பாகல்பட்டி, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, நல்லாகவுண்டம்பட்டி மற்றும் கீரைபாப்பம்பாடி, கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய ஊராட்சிகளுக்கு மையப்பகுதியாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கால்ல விழுந்த போது பெண்களே அதிக அளவில் இருந்தனர், டாஸ்மாக் ஊழியர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.