மயக்க டிரிங்ஸ் கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை! உஷார் மக்களே!!

ஜி.கே.சேகரன்,
மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள் தற்போது மயக்க டிரிங்ஸ்க்கு மாறியிருக்கிறார்கள். ரயிலில் வயதான தம்பதியருக்கு குடிக்கும் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது.
ஓசூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த ராஜு (75) மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் (67)ஆகியோர் அவர்களுக்கு சொந்தமாக எர்ணாகுளம் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை பார்த்து விட்டு எர்ணாகுளத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் (கடந்த 11ஆம் தேதி இரவு )வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ரயிலில் 40 வயது மதிப்பு மிக்க ஒருவர் அவர்களுக்குலேதோ ஒரு பானத்தை கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்தவுடன் அவர்கள் மயங்கி உள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருந்து ஐந்து சவரன் தங்க நகைகள் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்கள் சூட்கேஸ் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
அவர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்காததால் அவர்களை அழைத்துச் செல்ல வந்த மகன் உடனடியாக காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
அவர்கள் ரயிலில் மயங்கி நிலையில் வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதை கண்ட காட்பாடி ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் தற்போது மயக்கம் தெளிந்து கண் விழித்துள்ளனா.
இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் பானத்தில் போல மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவனை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ரயில் பயணிகளிடம் சக பயணிகள் பிஸ்கெட் கொடுத்தால் இப்போதெல்லாம் வாங்கி சாப்பிடுவதில்லை. அந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
அதே போல் தண்ணீர், கூல் டிரிங்ஸ், காபி போன்ற பானங்களை பயண நேரத்தில் மற்றவர்களிடம் வாங்கி பருக்கக்கூடாது.
ரயில் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.