பட்டாகத்தியை எங்கிருந்து வாங்கினார்களோ! பீதியில் மக்கள்!! கைது செய்யப்பட்ட இரண்டு சுரேஷ் கள்!

பட்டாகத்தியை எங்கிருந்து வாங்கினார்களோ! பீதியில் மக்கள்!! கைது செய்யப்பட்ட  இரண்டு சுரேஷ் கள்!

ஜி.கே.சேகரன்,

 பட்டாகத்தியை எங்கிருந்து வாங்கினார்களோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த சில வாலிபருக்குமிடையே  ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நடக்கும் திருவிழாவின்போது மோதல் ஏற்படுமாம்.இந்நிலையில் நேற்று கலைஞர் நகரில் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

 இதனை தொடர்ந்து நேற்று இரவு சுமார் 9 மணியளவில், டிஎம்சி காலனியை சேர்ந்த சிலர் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலன்(22). என்பவரை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை அங்கிருந்தவர்கள்  மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

  ஆனால் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள்  அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த முகிலனை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

   இந்த கொலை காட்சியை பார்த்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் பொது மக்கள் நாலா புறமாக சிதறியடித்து ஓடினர்.

  பின்னர் தகவலறிந்த திருப்பத்தூர் நகர காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி கொலை செய்த கொலையாளிகள் லெப்ட்.

 சுரேஷ் மற்றும் கபாப் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

  இந்த கொலை வெறி தாக்குதல் குறித்து பொது மக்கள் கூறுகையில், பளபளக்கும் பட்டாகத்திகளை ஊர்ல இருந்து எடுத்து சிலர் ஓடினார்கள். அமைதியாக இருக்கும் கிராமத்துக்குள் எதற்காக இந்த பட்டா கத்திகள். இதற்கு முன்னர் இது போன்ற கத்திகளை நாங்கள் பார்த்ததே இல்லை. இவற்றை எங்கிருந்துதான் வரவழைத்தார்களோ? இன்னும் எவ்வளவு இப்படி இருக்கிறதோ என்று அஞ்சுகின்றனர்.

  போலிசார் வீடு வீடாக சோதனையிட்டு இன்னும் கத்திகள் உள்ளதா என்பதை கண்டறிந்து அவற்றை கைப்பற்ற வேண்டும் என்கிறார்கள்.