ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன்! தனிப்பிரிவு அலுவலரின் போஸ்!

கு.அசோக்,
பரபரப்பாக பேசப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டிருக்கும் சூழலில் அவனை இன்று நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்தினர்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4 மாஜிஸ்த்திரேட்டுமுன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கொள்ளையன் டீக்காராமனை 15 நாள் ரிமான்டில் வைக்க மாஜிஸ்த்திரேட்டு உத்தரவிட்டார்.
அதன் பேரில் அவனை போலிசார் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 15 ஆம் தேதி சுவற்றில் துளையிட்டு 16 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
காவல்துறையினர் தனிப்படை அமைத்து இதில் தொடர்புடைய கொள்ளயனை செல்போன் சிக்னல் மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மேற்படி டீக்காராமனை கைது செய்தனர்.
இந்த நிலையில் டீக்காரமன் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.4 நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வரும் 4 ஆம் தேதி மீண்டும் வரையில் வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மீண்டும் 4 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வந்து ஆஜர்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் அவரை மீண்டும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று தொரப்பாடி சிறையில் அடைத்தனர்.
இவ்வளவு பெரிய கொள்ளையை நடத்தியதாக பிடிபட்டுள்ள நபரை போலிசார் சாதாரணமாக ஆட்டோவில் அழைத்துச்சென்றனர்.
இந்த காட்சிகளை செய்தியாளர்கள் படம்பிடித்த போது தனிப்புபிரிவைச் சேர்ந்தவர் உடையை சரி செய்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை காட்டிலும் தனிப்பிரிவு அலுவலரே இந்த காட்சிகளில் பிரதான இடத்தை பிடித்தார்.
நல்லா வேலை செய்யறார் அல்லவா?