உள்ளூர் மொழிகளில் வழக்குகளை நடத்த பிரதமர் கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்:-துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
உள்ளூர் மொழிகளில் வழக்குகளை நடத்த வேண்டுமென பிரதமர் கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் இதை தான் நாங்கள் முதலில் இருந்து கூறிவந்தோம், அதனை அவர் செயல்படுத்த வேண்டும் - இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு எப்போது தான் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்திருக்கிறது- தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது அதனை நிரப்புவதற்கு நிதி வசதியில்லை நிதியை கேட்டுகொண்டிருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் வள்ளிமலையில் பேட்டி
வேலூர் மாவட்டம்,காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் மேல்பாடி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவர் நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி விழாவில் பேசினார்
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்குகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது திமுகவின் நீண்ட நாள் கொள்கை. இப்போது தான் பிரதமர் சொல்லியுள்ளார் அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி தப்பி வருகின்றனர், ஆனால் எப்போது தான் மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.
தமிழக அனைத்து கட்சிகளும் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டுமென கூறியும் மௌனம் காக்கிறது.
ஆனால் வட இந்தியனுக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா 6 தடுப்பணைகள் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் படிப்படியாக பூரன மதுவிலக்கை கொண்டு வர கோரியுள்ளார் பாமக ஆட்சிக்கு வந்து பூரன மதுவிலக்கை கொண்டு வரட்டும்.
புதியதாக 2 மணல் குவாரி துவங்க சுற்றுசூழல் அனுமதி கோரியுள்ளோம், லாரி உரிமையாளர்களுக்கு மணல் குவாரி மணல் எடுக்க அனுமதி மறுக்கபடுவது குறித்து கேட்டதற்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவில்லை என்றாலும் நேரில் சென்று பணம் கட்டி லாரியில் மணல் வாங்கிகொள்ளலாம்.
நீர் வளத்துறை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது அதனை நிரப்ப நிதி பற்றாக்குறை உள்ளது நிதி கோரியுள்ளோம் என்றார்.
உள்ளூர் மொழிகளில் வழக்குகளை நடத்த பிரதமர் கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்:-துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
உள்ளூர் மொழிகளில் வழக்குகளை நடத்த வேண்டுமென பிரதமர் கூறியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் இதை தான் நாங்கள் முதலில் இருந்து கூறிவந்தோம், அதனை அவர் செயல்படுத்த வேண்டும் - இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு எப்போது தான் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்திருக்கிறது- தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது அதனை நிரப்புவதற்கு நிதி வசதியில்லை நிதியை கேட்டுகொண்டிருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் வள்ளிமலையில் பேட்டி
வேலூர் மாவட்டம்,காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிமலை கிராமத்தில் மேல்பாடி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவர் நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி விழாவில் பேசினார்
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்குகள் உள்ளூர் மொழியில் நடத்த வேண்டும் என்பது திமுகவின் நீண்ட நாள் கொள்கை. இப்போது தான் பிரதமர் சொல்லியுள்ளார் அதனை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை தமிழர்கள் உண்ண உணவின்றி உடையின்றி தப்பி வருகின்றனர், ஆனால் எப்போது தான் மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.
தமிழக அனைத்து கட்சிகளும் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டுமென கூறியும் மௌனம் காக்கிறது.
ஆனால் வட இந்தியனுக்கு பாதிப்பு என்றால் இவ்வாறு இருந்திருப்பார்களா 6 தடுப்பணைகள் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் படிப்படியாக பூரன மதுவிலக்கை கொண்டு வர கோரியுள்ளார் பாமக ஆட்சிக்கு வந்து பூரன மதுவிலக்கை கொண்டு வரட்டும்.
புதியதாக 2 மணல் குவாரி துவங்க சுற்றுசூழல் அனுமதி கோரியுள்ளோம், லாரி உரிமையாளர்களுக்கு மணல் குவாரி மணல் எடுக்க அனுமதி மறுக்கபடுவது குறித்து கேட்டதற்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவில்லை என்றாலும் நேரில் சென்று பணம் கட்டி லாரியில் மணல் வாங்கிகொள்ளலாம்.
நீர் வளத்துறை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது அதனை நிரப்ப நிதி பற்றாக்குறை உள்ளது நிதி கோரியுள்ளோம் என்றார்.