சசிகலாவுக்கு வலைவிரிக்கும் பா.ஜ.க.!

சசிகலாவுக்கு வலைவிரிக்கும் பா.ஜ.க.!

வ.மகேசு

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் திருமதி வி.கே.சசிகலாவை பாஜக பக்கம் இழுக்க வலைவிரிக்கப்பட்டிருப்பதாக பேசப்படும் சூழலில் இது குறித்து நாயினார் நாகேந்திரன் திருவாய் மலர்ந்துள்ளார்.

   தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன்  புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார்.

 அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அதில் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை.

 தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.