மண் கொள்ளை டிராக்டரை ஓட்டிய போலீஸ்!

ஜி.கே.சேகரன்,
ஏரியில் மண்ணை கடத்திட முற்பட்ட நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்! டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் வரை போலீசாரே டிராக்டரை ஓட்டி வந்தனர் டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல்!
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம் பள்ளி அடுத்த இராஜாவூர் புதுப்பட்டி ஏரியில் தொடர்ந்து சமூகவிரோதிகள் சிலர் மண் கடதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மண் கடத்தலில் ஈடுபட்டு வருவது பற்றி திருப்பத்தூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரின் உத்தரவின் பேரில் தனி படையினர் புதுப்பட்டி ஏரிக்கு விரைந்து சென்றனர். தனி படையினரை கண்டதும் மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து வாகனங்களை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
பின்னர் தனிப்படையினர் கொடுத்த தகவலின் பெயரில் கந்திலி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது காவலர் கார்த்திகேயன் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து அந்த ஏரியிலிருந்து கந்திலி காவல் நிலையத்திற்கு அவரே ஓட்டிச் சென்றார்.
அதேபோல் ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் எந்த பகுதியை சார்ந்தவர்கள் என கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனராம்.
ஸ்டேஷனுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை என்பதை பலரும் அறிந்ததே.