அயல்நாட்டில் இறந்த கணவரை மீட்டு தாங்க! ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்

அயல்நாட்டில் இறந்த கணவரை மீட்டு தாங்க! ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்

க.பாலகுரு

வெளிநாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தர கோரி  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி குழந்தைகளுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருவாரூர் அருகே கீழ மணலி ஊராட்சிக்குட்பட்ட காரனாதன் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் 45 இவருக்கு மகாலட்சுமி என்கிற மனைவி அக்னேஸ்வரபாலன் 17, டேனியல் ராணி 15 ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  

  ஜெயபால் கடந்த 2016 துபாய் நாட்டில் உள்ள அபுதாபி பகுதியில் கம்பி பிட்டராக வேலை பார்த்து வந்ததாக  கூறப்படுகிறது.

  இந்த நிலையில் விடுமுறைக்காக கடந்த 2019 ஆண்டு வந்து மீண்டும் அதே நாடு சென்ற நிலையில் கடந்த 9 மாதங்களாக நிறுவனம் ஊதியம் வழங்காமல் இருந்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.

  இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு தொலை தொடர்பும் இல்லாத நிலையில் இன்று அபுதாபி பகுதியில் இருந்து இவர்களுக்கு ஒருவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜெயபால் உயிர் இழந்ததாகவும் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 இதனை கேட்டு அதிர்ச்சியட்ய்ந்த இருந்த மனைவி மகாலட்சுமி மற்றும் குழந்தைகள் தங்களது உறவினர்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின் உடலை மீட்டு தர வேண்டும் மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின்  உயிரிழப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.