நிருபர்களை பழிவாங்க திட்டமிடும் டாஸ்மாக் ஊழியர்கள்! ஊழலை சுட்டிக்காடியதால் ஆத்திரம்!

J .அருண் ஹென்றிக்ஸ்,
திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சார்பாக ஒன்றிணைந்து 28-11-2023 அன்று திருப்பூர் மாவட்ட திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் எஸ். ஆர். எம். ஆகியோருக்கு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்கள்.
அதில் திருப்பூரில் இயங்கும் ஒவ்வொரு அரசு டாஸ்மாக் கடையிலும், அதன் ஊழியர்கள் அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
அதாவது குவார்ட்டர் மது பாட்டில் துவங்கி ஃபுல் பாட்டில் வரைக்கும் சரக்குக்கு ஏற்றபடி ரூ 10 முதல் 50 ரூபாய் வரை கட்டாயப்படுத்தி பணம் பறிக்கிறார்கள் என்பதே அந்த குற்றச்சாட்டின் சாரம்சம். இவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகாமல் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
முன்னதாக இப்படி செயல்படும் டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து தங்கள் கடமையை புரிந்த செய்தியாளர்களை சம்மந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே புகார் அளிக்கப்பட்டது.
எழுத்துப்பூர்வமாக இப்படி புகார் அளித்ததை அறிந்த டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் பருவ இதழியலாளர்களை குறி வைத்து அவர்கள் பணியாற்றும் நிறுவனம் மற்றும் பெயர்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சட்ட விரோதமாக பரவவிட்டு அவமானப்படுத்த முற்பட்டுள்ளார்கள்/அதோடுமட்டுமில்லாமல் செய்தி சேகரிக்கவிடாமல் இடையுறு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இதையறிந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வி.இ.எஸ்.ஜார்ஜ் அவர்கள், மேற்படி சட்டவிரோத செயலுக்கு காரணமான டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் இது தொடர்புடையவர்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடமும், டாஸ்மாக்கினுடைய நிர்வாக இயக்குனர் அவர்களிடமும், புகார் தெரிவித்து வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதேபோல் பத்திரிகையாளர்கள், செய்தி குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க முற்படும்பொழுது மிரட்டுகிறார்கள் என்கின்ற பழியை சுமக்கிறார்கள். இதற்கும் அதேபோல் பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் யாராவது மிரட்டல் செயல்களில் ஈடுபடுவதாக தெரிந்தால் அதையும் கண்டிக்கப்படும் என்கிறார் அவர்.