மெரினா பீச் அருகே கடல் உள்வாங்கியது!

மெரினா பீச் அருகே கடல் உள்வாங்கியது!

எஸ்.அபிஷேக்,

 மெரினா பீச், பட்டினப்பாக்கம் கடற்கரை, காசிமேட்டிலுள்ள அண்ணாநகர் பகுதி ஆகிய இடங்களில் 10 முதல் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது.இதனால் மணல் பரப்பு அதிக அளவில் தென்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்த பொதுமக்களும் பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்தவர்களும் கடல் உள்வாங்கியதை பார்த்து கடும் பீதி அடைந்தனர்.

 கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட

 போது கூட இப்படித்தான் ஏற்பட்டது.

  சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில் பின்னர் மீண்டும் சரியானது.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.