ஏ.சி.சண்முகம் கொண்டாடிய கிறிஸ்துமஸ்! தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை!

ஏ.சி.சண்முகம் கொண்டாடிய கிறிஸ்துமஸ்! தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை!

 ம.பா.கெஜராஜ்,

   கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் டிச 25-ல் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலுள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

 அதையொட்டி சென்னை மற்றும் புறநகர்பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர்.

 குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆராதனை முடிவில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்தையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர்.

 வேலூர் சிஎஸ் ஐ.

 சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் தலைமை ஆலயமான கதீட்ரல்பேராலயம், மிகவும் பழமை வாய்ந்தவேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லிஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

  சிஎஸ்ஐ வேலூர் மத்திய ஆலயத்தில் பேராயர் மேதகு எச்.சர்மா நித்யானந்தம் தலைமையில் அதிகாலை ஆராதனை ஜெபம் நடைபெற்றது. இதில் திருச்சபை அங்கத்தினர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னாள் ஆயர்கள் மற்றும் முன்னாள் பேராயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்த சிறப்பு விளக்கம் அளிக்கப்பட்டது.

 இதே போன்று காட்பாடி குடியாத்தம் பேர்ணாம்பட்டு பள்ளிகொண்டா,,பாகாயம்,சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் கோலாகலமாக வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

 சென்னை சாந்தோம்,

சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றினார். இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். இதேபோல், பெசன்ட் நகர்அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னைஆலயம், எழும்பூர் திரு இருதயஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

 குரோம்பேட்டை அமலோற்பவ அன்னை ஆலயம், தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், சேலையூர் புனித மாற்குஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், மறைமலைநகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம், ரயில்நகர் புனித அந்தோணியார் ஆலயம், காட்டாங்கொளத்தூர் லூர்து அன்னை ஆலயம், பேரமனூர் எம்டிசி நகர் புனித ஆரோக்கிய அன்னை உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 ரோமன் கத்தோலிக்

வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள வின்னேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தணை மற்றும் திருப்பலி பிரார்த்தணை கூட்டமானது நடைபெற்றது. இதில் ஊர்வலமாக வந்த மக்கள் தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு குறித்த பாடல்களை பாடியதுடன் இரவு 12 மணிக்கு குழந்தை இயேசு குழந்தையாக பிறந்ததை அறிவித்து உருவ பொம்மையை எடுத்து காட்டி கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிறப்பு திருப்பலிபூஜையும் நடைபெற்றது. மேலும் பிரார்த்தணையில் உலகம் அமைதியுடனும் மக்கள் நலமுடனும் வாழ பிரார்த்தணைகளை செய்தனர் இதில் கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

 செயின்ட் மேரிஸ் பள்ளியில் ஏ.சி.எஸ். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்,

 இன்று தேவாலயங்களில் மட்டுமல்லாமல் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் ஆதரவற்றோர்  குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்து பிறப்பு விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  அதன் அடிப்படையில் வேலூர் செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள பிள்ளைகள் மற்றும் ஆண்கள் பெண்கள் அனைவருடனும் சென்னை ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரிகளின் நிறுவனர் மற்றும் தாளாளர் ஏசி சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி அனைவருடனும் அன்பை பகிர்ந்து கொள்வதே கிறிஸ்து பிறப்பின் அடையாளம், இதில் உங்களுடன் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி  என்று பேசினார்..

மேலும் பள்ளியின் தாளாளர் சகோதரி கேட்டுக்கொண்டதன் பேரில் ஐந்து ஸ்மார்ட் போர்டுகளை இந்த பள்ளிகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

 பின்னர் பள்ளி மற்றும் இல்ல மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்வில் ஜி.பி.கே. பாலாஜி, பாரத் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் இந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.