திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது! மந்திரிகள் பங்கேற்பு!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது! மந்திரிகள் பங்கேற்பு!

 ஜி.பாலகுரு,

 ஆசியாவிலேயே மிகவும் பழமையான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம்  இன்று நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தினை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர்.பி.மூர்த்தி வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து  இழுத்தனர்.

  திருவாரூர் தியாகராஜர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கிறது. சைவ சமய குறவர்கள் திருஞானசம்மபந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமைமிகு தலமாக விளங்கிறது.

 சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி அளிக்கின்ற தலமாகவும் திகழ்கிறது.

இந்த சிறப்புமிக்க கோவிலில் மிக பெருமை சேர்ப்பது ஆழித்தேர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

 பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஜதீகம். அலங்கரிக்காதபடாத தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். விமானம் வரை தேர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சியளிக்கிறது.

  திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுக்கள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 220 டன். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது.

 இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டபபட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் மொத்த எடை 300 டன்னாகும்.

தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 புல்டோசர்கள், 4 வீதிகளில் தேரை திரும்பவும், செலுத்தவும் முட்டுகட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது.

  தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பவர். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்காலம் என்பது ஜதீகம். நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார் .

 இதனையடுத்து இன்று (செவ்வாய்கிழமை) சிறப்புமிக்க ஆழித்தேராட்டம் நடைபெற்றது.  முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு ஆழத்தே ஆழித்தேர்  வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட விழா நடைபெற்றது .

இந்நிகழ்வில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்.குமரகுருபரன்,மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் .பூண்டி கே.கலைவாணன் , தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர்.உ.மதிவாணன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விஜயகுமார், மாவட்ட ஊராட்சித்தலைவர்.கோ.பாலசுப்ரமணியன்,  மடாதிபதிகள் திருப்புகளூர் வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ? சத்யஞான மகாதேவ தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் ,தருமை ஆதீனம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்களும்,ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.