இராணிப்பேட்டை மேம்பால பணி குளறுபடி! ஊர்ந்து கடக்கும் கனரக வாகனங்கள்!
கு.அசோக்,
எந்த ஒரு முன் அறிவிப்பு வெளியிடாமல் இராணிப்பேட்டை அருகே மேம்பால பணிகள் நடைபெறுகிறது. இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை ஆற்காடு இடையிலான பாலாறு குறுக்கே அமைந்துள்ள பழைய மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டிருக்கிறாது.
கடந்த 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பணியினால், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதேபோல் வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் அனைத்தும்லாமை வேகத்தில் கடக்கின்றன.
ஒரே பாலத்தில் இரு மார்க்கமாக பிரிக்கப்பட்டு காவல் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலமாக திருப்பிவிடப்பட்டு வருகிறது. வாகனங்கள் இப்படி திருப்பி விடப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அனைத்தும் அணிவகுத்து ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன.
எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேம்பால பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதேபோல் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளூர் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்று வழி பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.