நறுவீ -  தி இந்து... சமுதாய நலத்திற்கான உன்னத முயற்சியாகும்! "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா" குறித்து துணை முதல்வர் பேச்சு!

Ma.ba.Gajaraj,

வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா"  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.         

 மக்களின் ஆரோக்கியத்தில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாக, வேலூர் நறுவீ மருத்துவமனை மற்றும் தி இந்து குழுமம் சார்பில் ஆரோக்கியமான முறையின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா"  என்ற நிகழ்ச்சி தொடக்க விழா இன்று (டிச.7) காலை நறுவீ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

          நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வரவேற்று பேசுகையில் ஆரேக்கியமான வாழ்க்கை முறைக்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தி இந்து குழுமம் இந்திய அளவில் முயற்சி எடுத்தபோது அதற்கான வாய்ப்பை நறுவீ மருத்துவமனைக்கு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

  மக்களின் ஆரோக்கியத்திற்கான இந்த நிகழ்வை தொடங்கி வைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நமது தமிழ்நாட்டின் துணை முதல்வரை அழைக்க முடிவு செய்யப்பட்டது.

 அதனை ஏற்று துணை முதல்வர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது.

 இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாதம் தோறும் மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆரோக்கிய வாழ்க்கை முறை பற்றிய பல்வேறு தலைப்புகளில் காணொலி கருத்தரங்குகள் வருடம் முழுவதும் நடத்தப்படும் என்றார்.

          நிகழ்ச்சியில் மாநில நீர்பாசனம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகையில் பேசியதாவது:

          ஒரு மருத்துவமனையை தொடங்கி அதனை திறம்பட நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல, வேலூரில் நறுவீ என்ற மருத்துவமனையை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு எளிய கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வரும் இம்மருத்துவமனையின் தலைவர் ஜி.வி. சம்பத் மற்றும் அவரது குடும்பத்தினரை நான் பாராட்டுகிறேன் என்றார்.

 விழாவில் மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா"  என்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான நிகழ்வை தொடங்கி வைத்து, பின்னர் "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா"  இலட்சினை அச்சிடப்பட்ட பந்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகத்தை எழுதி கையொப்பமிட்டார்.

 பின்னர் உதயநிதி பேசுகையில்,

          மக்களின் ஆரோக்கியத்திற்கான இந்த திட்டதினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது சமுதாய நலத்திற்கான உன்னத முயற்சியாகும். நோய் வரும் முன்பே நம்மை காத்துக்கொள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் வருமுன் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார்.

  அதனை தொடர்ந்து நமது தமிழ்நாடு முதலமைச்சர் சுகாதாரத்துறையை மேலும் பலப்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தினை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இதுவரையிலும் சுமார் இரண்டு கோடி பேருக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டி 2024-ம் ஆண்டிற்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது.

          நாட்டில் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் 13 துறைகளில் தமிழ்நாடு சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது பெருமையாக உள்ளது. தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மூலமாக உடல் உறுப்பு தானம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

          இவ்விழாவில் தி இந்து குழுமத்தின் இயக்குநர் என். ராம் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி பேசுகையில்,

          நறுவீ மருத்துவமனை எளிய கட்டணத்தில் உலகத்தரமான மருத்துவ சேவை அளித்து வருவது பாராட்டுக்குரியது. சுகாதாரத்துறையை எடுத்துக்கொண்டால் நாட்டில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார்.

  இத்திட்டம் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. அதே போன்று இருதய அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை அளித்து வருவது அரசின் சாதனைகளில் ஒன்றாக உள்ளது. சுகாதார கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தி இந்து குழுமத்துடன் நறுவீ மருத்துவமனை நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யதுள்ளதற்கு நறுவீ மருத்துவமனையை பாராட்டுகிறேன்.

          நிகழ்ச்சியில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ப. கார்த்திகேயன், ஏ.பி. நந்தகுமார், ஜே.எல். ஈஸ்வரப்பன், அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் ஏ. சுஜாதா, தி இந்து குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் எல்.வி. நவநீத், நறுவீ மருத்துவமனை துணைத் தவைலர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, அறங்காவலர் சுகுமார், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி சம்பத், ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் இந்த நிகழ்ச்சிக்கான தலைவர் தி இந்து குழுமத்தை சேர்ந்த ஏ. சபிக் ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.