சிறுவயது நண்பரை கொலை செய்த போதை பாசக்காரர்!

கு.அசோக்,
சிறுவயதில் இருந்து நெருங்கிய நண்பராக இருந்தவரை கத்தியால் குத்தி கொலை. போதையால் ஏற்பட்ட விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, சரசு இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ரவியின் மூத்த மகன் ஸ்ரீதர் வயது (25) ஆற்காடு பகுதியில் உள்ள மிச்சர் கடையில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஆற்காடு ஒத்தவாடை தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் மற்றொரு ஸ்ரீ¦தர் வயது (28) இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக பழகி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பூபதி நகரில் இருக்கும் ஸ்ரீதர் வீட்டிற்கு வந்து அவரை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று இருவரும் வீட்டின் மேல் மாடியில் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது திடீரென அதிக மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆவேசமடைந்த ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஸ்ரீதர் அவருடைய நண்பரான பூபதி நகர் ஸ்ரீ¦தரின் கழுத்துப்பகுதியில் உள்ள தொண்டையில் ஓங்கி குத்தி கொலை செய்ததாக கூறி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தானே முன்வந்து சரண் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆற்காடு நகர போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஸ்ரீரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த கொலை சம்பவம் குறித்து பூபதி நகர் பகுதியில் சேர்ந்த ரவி சரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
ஆற்காடு பகுதியில் சிறுவயதில் இருந்து நெருங்கி பழகிய நண்பரையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நெருங்கிய நண்பரே கத்தியால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..